Begin typing your search above and press return to search.
தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24ம் தேதி கொரோனோ தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 24ஆம் தேதி கொரோனோ தடுப்பூசி போடப்படும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம், 24.06.2021 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு, அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, இராஜாஜி நீச்சல் குளம் அருகில், இலக்கியம்பட்டி (அ), தருமபுரி. என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் முக கவசம் அணிந்து வரவேண்டும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி கேட்டுக் கொண்டுள்ளார்.