Begin typing your search above and press return to search.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலைவிழாவில் ‘பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்’ என்னும் தலைப்பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது.
HIGHLIGHTS
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா நடைபெற்றது. கரகாட்டம், சிலம்பாட்டம், காளியாட்டம், பறையாட்டம் ஆகிய மாணவர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
முத்தாய்ப்பாக, இயற்கை வளம் பாதுகாப்பு, மனிதநேயம், சமத்துவம் பேணுதல், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி "பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்" என்னும் தலைப்பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது. இதில் பேராசிரியர் முருகதாஸ் சூரன் கதாப்பாத்திரத்தில் வேடமேற்று மாணவர்களை வழிநடத்தினார்.
இக் கலைவிழாவினை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சிவப்பிரகாசம் ஒருங்கிணைத்தார்.