/* */

பண்ருட்டி அருகே குடிபோதையில் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் கைது

மது போதையில் தகராறு செய்த தம்பியை கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

பண்ருட்டி அருகே குடிபோதையில் தம்பியை குத்திக் கொலை செய்த  அண்ணன் கைது
X

முத்தாண்டிகுப்பம் சேர்ந்தவர் தனசேகர்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் சேர்ந்தவர் தனசேகர் பால் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் இவரது தம்பி நீலமேகம் குடித்துவிட்டு அடிக்கடி கடன் பெற்று தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நீலமேகம் பெற்றோர்களிடம் மற்றும் அண்ணன் தனசேகரிடமும் சண்டையிட்டு உள்ளார் இந்நிலையில் குடிபோதையால் ஆத்திரமடைந்த தனசேகர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நீல மேகத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நீலமேகம் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் ஹபிபுல்லா மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தம்பியை சரமாரியாக குத்தி கொன்ற அண்ணனின் செயல் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 March 2022 4:52 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  2. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  3. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  4. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  9. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  10. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...