/* */

வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் : உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு

கொரோனா தொற்று நோயாளிகள் பயன்பாட்டிற்கான சுமார் 70 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் : உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு
X

ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வருகை தந்தார். அவருடன் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியாளர் நாகராஜ் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி மற்றும் இதர பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,

மலைப்பிரதேசம் என்பதால் வால்பாறைக்கு தேவையான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை செய்ய வந்துள்ளேன். இப்பகுதி பிரச்சனைகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்து தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதுடன் அதற்காக பாடுபடுவேன் என்றார். இதையடுத்து வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகள் பயன்பாட்டிற்கான சுமார் 70 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

Updated On: 11 Jun 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...