/* */

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது அல்ல: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது அல்ல; நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது அல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது அல்ல: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
X

மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

கோவை வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர் எப்போது செல்வார்கள் என்று சிந்தித்ததை போல் திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் காத்திருப்பதாகவும், கோவை மாவட்டம் திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றாலும் அது மணக்காது எனவும் அவர் விமர்சித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சர் வந்துள்ளார். அவர் அங்கிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்வதாகவும், இதை கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். மக்களின் ஆதரவு எப்போதும் பாஜகவிற்கு இருக்கும். மக்களுக்கும் வாக்குபெட்டிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நகர்ப்புற தேர்தலில் தனியாக பாஜக போட்டியிடுவதாகவும் பாஜக பலத்தை தெரிந்துகொள்ளவே தனித்து போட்டியிடுவதாகவும் கூறினார். இந்த தேர்தல் சமூகவலைதள தேர்தலாக மாறியுள்ளது. ஸ்மார்ட் வொர்க் மூலமாக மொபலை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் தொடர்பான காட்சிகள் மற்றும் படக்காட்சிகளை அதிகம் பகிர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரத்தை சுட்டிக்காட்டிய அவர், நேற்றிலிருந்து திமுக பொய் சொல்ல துவங்கிவிட்டதாகவும் பாஜகவை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும் என முதல்வர் முடிவு செய்து விட்டார் என அவர் குறிப்பிட்டார்.

நீட் பாஜகவை திணித்தது என முதலமைச்சர் கூறுவதாகவும், ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களை காட்டிலும் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நீட் மூலமாக இருளர் சமூகத்திலிருந்து நீட் தேர்வு மூலம் தேர்வு பெற்றுள்ளதாகவும், மதுரை மாணவிக்கு பாஜக மாவட்ட தலைவர் முழு கட்டணம் செலுத்துவதாக அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

நீட் தேர்வு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்க முடியாமல் தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளை இயக்கி வரும் திமுகவினர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறிய அவர், திமுக எம்பி காந்திசெல்வன் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது தான் சீட் (காமன் எலிஜிபிளிட்டி டெஸ்ட்) தேர்வை கொண்டு வந்தார் என மீண்டும் குறிப்பிட்ட அவர் இதையெல்லாம் மறைத்துவிட்டு தமிழக அரசு அரசியல் செய்வதாகவும் கூறினார்.

வேட்பு மனு பரிசீலனையின் போது ஆளும்கட்சியின் தலையீடு அதிகம் இருந்ததாக கூறிய அவர், திமுக தோல்வி முகத்தை சந்திக்க துவங்கியதை இது உறுதிபடுத்துகிறது எனவும் கூறிய அவர், எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரது காலிலும் விழுந்து வாக்கு கேட்க வேண்டும் எனவும் சகோதர சகோதரிகள் போல் சென்று வாக்கு வாங்க வேண்டும் எனவும் அவர் அப்போது கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு பக்கம் திமுக தனது அதிகாரத்தை காட்டுகிறது. ஒருபக்கம் பாஜக மோடியின் சாதனைகளை சொல்லி வெற்றிபெற உழைக்கிறோம். கடந்த 2016ல் நீட் தேர்வு மசோதா குடியரசு தலைவர் வரை சென்று திரும்ப வந்துள்ளது.

ஆனால் அதை நினைவில் கொள்ளாமல் திமுக கூட்டணி கட்சிகளை மட்டும் இணைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது அல்ல. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது அல்ல. 517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை.

கோவையில் அடிப்படைவாத அமைப்புகள் பிரச்சனை செய்வதாகவும், ஆனால் பாஜக வேட்பாளர்கள் எங்களது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் தாமரையை எடுத்து செல்வதே இலக்கு. கர்நாடகாவில் மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான் எனவும் இந்து என்பது மதமே கிடையாது. அது ஒரு வாழ்வியல் முறை எனவும் மதம் என்ற வார்த்தையை பயன்படுத்துபவர்கள் புரிதல் இல்லாதவர்கள் எனவும் விமர்சித்தார்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதை தமிழக அரசு எதிர்ப்பது குறித்து கேட்டபோது, முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது எத்தனை முறை சிபிஐ விசாரணைக்கு கோரினார் என்பதை எண்ணிப்பாருங்கள் என பதிலளித்தார்.

Updated On: 7 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!