/* */

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

குரங்கு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அருகே அமைந்துள்ளது குரங்கு அருவி. வால்பாறை, சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் குரங்கு அருவி வழியாக கொட்டி ஆழியார் அணையில் சென்று சேர்கிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளித்து மகிழ உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் கடந்த இரு நாட்களாக அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 18 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்