/* */

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

கோவை மேட்டுப்பாளையம் அருகே, லாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
X

கோவை, மேட்டுப்பாளையத்தில் நடந்த வாகனச் சோதனையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த லாரி பிடிபட்டது. 

கோவை மாவட்ட தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மேட்டுப்பாளையம் அருகே பாரதி நகரில் வாகன தணிக்கை நடத்தினர். சோதனையின்போது, அங்கு வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த லாரிக்குள் ரகசியமாக பேப்பர் லோடின் உள்ளே மறைத்து கொண்டு வரப்பட்ட, மொத்தம் 277.89 லிட்டர் அளவுடைய 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இது தொடர்பாக, லாரி ஓட்டுனர் பாபு மற்றும் உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோரை, காவல் துறையினர் கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Jun 2021 2:48 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...