/* */

கோவை ரிங் ரோடு திட்டப்பணிக்கு தமிழக அரசு ரூ. 845 கோடி ஒதுக்கீடு

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முழுமையான ரிங் ரோடு திட்டத்திற்கு, ரூ. 845 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

HIGHLIGHTS

கோவை ரிங் ரோடு திட்டப்பணிக்கு தமிழக அரசு ரூ. 845 கோடி ஒதுக்கீடு
X

கோப்பு படம் 

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முழுமையான ரிங் ரோடு திட்டத்திற்கு, ரூ. 845 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த, 2010ம் ஆண்டில், தி.மு.க ஆட்சியின் போது, கோவைக்கு மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது, இத்திட்டப்பணிகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

நகரின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், மதுக்கரையில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மொத்தம் 33 கி.மீ.,க்கு அமைக்கப்படுகிறது. இப்பணிகளுக்கு மாநில அரசு, ரூ.845 கோடியை ஒதுக்கியுள்ளது.

இதில், நிலம் கையகப்படுத்த ரூ. 320 கோடி பயன்படுத்தப்படும். அதன்படி, 306 பட்டா நிலங்கள், 50 ஏக்கர் அரசு நிலங்கள், இப்பணிக்காக கையகம் செய்யப்படும். கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால், இப்பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  3. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  4. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  5. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  6. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  10. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...