/* */

தமிழகத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பெறும்: மேயர் வேட்பாளர் கல்பனா

கோவை மாநகராட்சியை தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன் என்று, மேயர் வேட்பாளர் கல்பனா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பெறும்: மேயர் வேட்பாளர் கல்பனா
X

கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக 19வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கல்பனா வெற்றி பெற்றார். 40 வயதான இவர், முதல்முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது, திமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னைத் தேர்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து, கோவை மாநகராட்சியை தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன். கோவை நகரில் குடிநீர் வசதி, சாலை வசதி, என அனைத்தையும் முதல்வர் ஆசியுடன் செய்து தருவேன் என்றார். கோவை மாநகராட்சி முதல் பெண் மேயர் கல்பனா என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை