/* */

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு

மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பங்கேற்றுள்ளன.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு
X

விழிப்புணர்வு கலை பயணத்தை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்.

தமிழக முதல்வர் இல்லம் தேடி கல்வி திட்டத்தை சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அத்திட்டம் குறித்தான சில சந்தேகங்கள் மக்களிடையே காணப்பட்டது. எனவே தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நடத்த திட்டமிடப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வு கலைப்பயண வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக கிராம புறங்களில் அதிக கவனம் செலுத்தி விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலை பயணத்தை மேற்கொள்ள உள்ள கலைக்குழுவினருக்கும் கல்வி துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட கல்வி துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  8. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  9. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  10. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!