/* */

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்ற அரசு அதிகாரிகள்

Coimbatore News- கொத்தடிமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், துண்டு பிரசுரங்கள் வழங்குவதும் செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின  உறுதிமொழி ஏற்ற அரசு அதிகாரிகள்
X

Coimbatore News- உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

Coimbatore News, Coimbatore News Today- ஆண்டுதோறும் பிப்ரவரி 9 ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் அரசு அலுவலகத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொத்தடிமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், துண்டு பிரசுரங்கள் வழங்குவதும் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் நூதன முறைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ராமகிருஷ்ணா கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கொத்தடிமை ஒழிப்பு தொடர்பாக நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கோவை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நாடகங்கள் மேற்கொள்வதற்கு புறப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கொத்தடிமை முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் மாநகர காவல் துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Updated On: 9 Feb 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...