/* */

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது : திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருக்க கூடிய அரசு திராவிட மாடல் அரசு

HIGHLIGHTS

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது : திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்
X

கணபதி ராஜ்குமார் பிரச்சாரம்

இந்தியா கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லிங்கனூர், பெரிய தோட்டம் காலனி, திம்மையா நகர், வீரகேரளம், சுண்டப்பாளையம், ஓணாம்பாளையம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை மக்களுக்கும் தேவையான திட்டங்கள், கோவையின் தொழில் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திமுக தான். இன்னும் அற்புதமான திட்டங்கள் மூலம் கோவை பல்வேறு வளர்ச்சியை காண உள்ளது திராவிட மாடல் ஆட்சியில்.

செம்மொழி மாநாட்டின்போது கோவைக்கு சர்வதேச தரத்திலான செம்மொழி பூங்கா, திட்ட சாலைகள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஒன்றியத்தில் ஒருமித்த கருத்துடைய ஆட்சி அமையும் பட்சத்தில் ஒன்றிய அரசிடம் இருந்து நிதிகளை பெற்று இன்னும் பல திட்டங்கள் கொண்டு வர முடியும்.

எனவே தான், மதவாத, பாசிச பாஜக அரசை அகற்றி, இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைத்து காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல். நாளைய தினம் இஸ்லாமிய சகோதரர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ளனர். சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருக்க கூடிய அரசு திராவிட மாடல் அரசு. மதவாத சக்தியாக பாஜகவை இந்த தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்புவோம். மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.

Updated On: 10 April 2024 5:15 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...