/* */

தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
X

திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இவருக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த, காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும், ஆறுமுக நயினாருக்கும் கடந்தாண்டு ஜூன் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், 20 பவுன் நகையும், ஆறுமுக நயினாருக்கு 5 பவுன் நகையும் போட்டுள்ளனர்.

இதனையடுத்து இளவரசியின் விருப்பிற்கு மாறாக, மாத்திரைகளை கொடுத்து உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து 14 நாட்கள் மட்டுமே தன்னுடன் இருந்துவிட்டு வேலை நிமித்தமாக கோவைக்கு வந்துவிட்டார். இதனையடுத்து லதா என்ற பெண் இளவரசியிடம் செல்போனில், உனது கணவரின் பெண் தோழி எனக்கூறி ஆபாசமாக பேசியுள்ளார். அதே எண்ணில் இருந்து ஆறுமுக நயினாரும், சந்தர்ப்ப சூழலால், உன்னை திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது. நீ ரொம்ப ஆசைப்படாதே , முடிந்தால் எங்கள் வீட்டில் இரு, இல்லையென்றால் உன் வீட்டிற்கு போய்விடு என மிரடியுள்ளார். இதனையடுத்து இளவரசியின் தாய் ஆறுமுக நயினாரின் பெற்றோர்களிடம் பேசியுள்ளனர். அவர்களும் என் மகன் எஸ்பி வரைக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்க தகுதி என்ன என் தகுதி என கேட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.

ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்துகொண்டு, முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வேறு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் கணவர் ஆறுமுக நயினார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார் மனுவை அளிக்க வந்தார். இவர் தற்போது கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 May 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!