/* */

பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் பேட்டி

24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் பேட்டி
X

பருவமழை முன்னேற்பாடு ஆலோசணைக் கூட்டம்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த, ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாரஸ் அகமது , கோவை மாவட்ட நிர்வாகம் வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை சிறப்பாக எடுத்திருப்பதாகவும், தாலுக்கா வாரியாக பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டிருக்கின்றன எனவும் கூறினார்.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பிரச்சனை இருக்கும் பகுதிகளை நாளை பார்வையிட இருப்பதாகவும் கூறினார். மாவட்டம் முழுவதும் பருவ மழை பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரான் பேசுகையில், வால்பாறை ,மேட்டுப்பாளையம், சிறுமுகை பவானி ஆற்றுப்பகுதி என 21 இடங்கள் குறைவான பதற்றம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், ஏழு நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கி இருப்பதாக தெரிவித்தார். எந்த பிரச்சனை வந்தாலும் உடனே அவர்களுக்கு உதவ முதல் நிலை மீட்பாளர்கள் 1835 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை இருப்பதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும், ஆசிரியர்களும் வரத்தேவையில்லை என்றார். அதே சமயம் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவித்தார். மாநகராட்சிப்பகுதியில் மேம்பாலங்களின் கீழ் மழை நீர் தேங்காமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராஜா கோபால் சுங்காராவும், மாநகரம் மற்றும் மாவட்டங்களில் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாக ஆணையர் தீபக் தாமோதர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினமும் தெரிவித்தனர்.

Updated On: 10 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  3. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  4. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  5. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  6. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  7. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  8. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  9. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  10. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?