/* */

முகத்தை சேதப்படுத்திய 'அழகு' நிலையம்; கோவையில் நிகழ்ந்த துயரம்

Mens Beauty Salon - கோவையில், அழகுநிலையம் சென்ற கல்லுாரி மாணவர் முகத்தில், வெந்நீர் கொட்டியதால் முகம் வெந்து சேதமானது.

HIGHLIGHTS

முகத்தை சேதப்படுத்திய அழகு நிலையம்; கோவையில் நிகழ்ந்த துயரம்
X

கோவையில், கல்லுாரி மாணவரின் முகத்தை சேதப்படுத்திய ப்யூட்டி சலுான்

Mens Beauty Salon -கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர், அப்பகுதியில் உள்ள ஒரு ஆண்கள் அழகுநிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர் முகத்தை அழகுபடுத்த, நீராவி பாத் எடுக்கப்பட்டது.அப்போது கொதித்துக்கொண்டு இருந்த, வெந்நீர் அந்த மாணவரின் முகத்தில் கொட்டியதால், முகம் வெந்தது. மாணவர் வலியால் அலறி துடித்தார்.


உடனே அங்கிருந்த ஊழியர், சாதாரண கிரீமை எடுத்து அந்த காயத்தில் போட்டுவிட்டு மாணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் அந்த மாணவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அழகுநிலைய உரிமையாளர் சஞ்சய்தாஸ், ஊழியர் வித்யாதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை