/* */

புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோ டிரைவரை கத்தியால் தாக்கி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு
X

ஆட்டோ டிரைவரை தாக்கிய சம்பவத்தில் விசாரணை நடத்தும் போலீசார்.

புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக ஆட்டோவை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்த நபரை திடீரென வந்த கும்பல் கத்தியால் தாக்கி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் காயம்பட்ட நபர் பிரபு வயது 28 என்பதும் திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு அருகில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் பிரபுவை தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கத்தியால் வெட்டிய நபர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் திடீரென மர்ம கும்பல் கத்தியால் ஒருவரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  2. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  4. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  5. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  6. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  7. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி