/* */

ரேஷன்கடைகளில் வெளிநபர்கள் இருந்தால் கைது கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

ரேஷன்கடைகளில் பணியாளர்களைத் தவிர்த்து வெளி நபர்கள் உள்ளே இருந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது

HIGHLIGHTS

ரேஷன்கடைகளில் வெளிநபர்கள் இருந்தால்  கைது கூட்டுறவுத்துறை எச்சரிக்கை
X

பைல் படம்

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்ட உத்தரவு: ரேஷன்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டு நர்களைத் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டுறவுத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.அதன்படி,ரேஷன்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.

3 ஆண்டுக்கு மேலாக ஏதேனும் பணியாளர் ஒரே கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

ரேஷன்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் ரேஷன்கடைகளில் இருந்தால்,

இதுகுறித்து போலீசார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் கடையின் விற்பனையாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும்.

கடைகளில் வெளி நபர்கள் காணப்படுவதாக புகார்கள் பெறப்பட்டால் இதற்கு சம்மந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளரே பொறுப்பு என்று எடுத்து கொண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.

Updated On: 22 July 2021 7:03 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!