/* */

கொருக்குப்பேட்டையில் திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருமணம் நடந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் கூறியதால் பெண் தூக்கு போட்டு தற்கொலை.

HIGHLIGHTS

கொருக்குப்பேட்டையில் திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

திருவொற்றியூர் அடுத்த கொருக்குப்பேட்டையில் திருமணம் நடந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் கூறியதால் பெண் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.

திருவொற்றியூர் அடுத்த கொருக்குப்பேட்டை பாரதி நகர் 6வது தெரு சேர்ந்தவர் சத்யபிரியா வயது (25) இவரது கணவர் ராஜ்குமார் வயது(30) இருவரும் உறவினர்கள் இவர்களுக்கு கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்10தேதி பெரியேர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் செய்த முதல் இன்று வரை இருவரும் தனியாக வசித்து வந்தனர். சத்யபிரியா கடந்த ஒரு வருடமாக சோழிங்கநல்லூரில் உள்ள அசெஞ்சர் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7தேதி ராஜ்குமார் சத்திய பிரியாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி நிறுத்திவிட்டார். ராஜ்குமார் தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவன வங்கியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜ்குமாருக்கும் சத்யபிரியாவிற்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வேலை முடிந்து விட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது போனை‌ எடுக்க வில்லை. இதனால் அதே பகுதியில் உள்ள உறவினர் முத்தழகு வரவைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தார். அருகிலிருந்தவர்கள் உதவியோடு மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆவதால் தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடபட்டு உள்ளது. இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  4. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  5. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  6. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  8. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  9. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  10. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு