Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் : தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள சிறைத்துறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள சிறைத்துறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிஜிலா நாகேந்திரன், சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார், கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.