Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபர்
சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
சென்னை எம்கேபிநகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரேம்குமார்(44). இவரது பக்கத்தை வீட்டை சேர்ந்தவர் தமிழ்(30). இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு குடிபோதையில் பிரேம்குமார் வீட்டுக்கு வந்த தமிழ், தன்னுடைய மனைவி குளோரி என்னை விட்டு பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதனை தடுக்க வந்த பிரேம்குமாரின் மனைவி ஸ்வேதாவை தாக்கி கீழே தள்ளினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவர் பிரேம்குமாரின் காதை கடித்து துப்பினார். இதில் பிரேம்குமார் காதில் ஒரு பகுதி தனியாக வந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் பிரேம்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழை தேடி வருகின்றனர்.