/* */

திருவள்ளூர்: ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் அருகே வடகரை ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
X

திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் நடை பெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், துணைத்தலைவர் அணிதாகுமாரிசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டு 2022-2023-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விழிப்புணவு பேரணியை துவக்கி வைத்தனர். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி முதல் வடகரை ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளில் பேரணியாக சென்று பொதுமக்களிடையே தீவிர விழிப்புணவு ஏற்படுத்தினர்.

இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்.சம்பத், நாராயணசாமி, வழக்கறிஞர் டில்லிபாபு, ஊராட்சி செயலர் உல்லாசம் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தனசேகர், கண்ணன், கோபி, சாமு, ஐய்யப்பன், சரத், குகன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Updated On: 18 Jun 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!