/* */

தமிழக முதல்வருக்கு அற்புதம்மாள் திடீர் கோரிக்கை..!

ராபர்ட் பயாஸ் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு பரோல் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

தமிழக முதல்வருக்கு அற்புதம்மாள் திடீர் கோரிக்கை..!
X

புழல் சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சிறைக்குள் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து புழல் சிறை வாயிலில் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ராபர்ட் பயாஸிற்கு உடல்நிலை சரியில்லை என்பதை கேள்விப்பட்டு, தான் சந்திக்க வந்ததாக தெரிவித்தார். ராபர்ட் பயாஸின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டு ராபர்ட் பயாசுக்கு பரோல் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் பேரறிவாளனுக்கு கிடைத்த தீர்ப்பு அனைவருக்கும் பயன்தரும் வகையில் இருப்பதாகவும், அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வகையில் ஓரிரு மாதங்களில் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும், பேரறிவாளனுக்கு பெண் பார்க்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்த அற்புதம்மாள் வழக்கில் இருந்து மற்றவர்கள் விடுதலை ஆகாததால் பேரறிவாளன் மன வருத்தத்துடன் உள்ளதாக அற்புதம்மாள் குறிப்பிட்டார்.

தான் மட்டுமே விடுதலையாகியுள்ள நிலையில் அனைவரும் விடுதலை ஆனால் மட்டுமே கொண்டாட்டம் என பேரறிவாளன் கூறி வருவதாக அவர் தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது 16பேர் இறந்தது குறித்து எழுந்து வரும் கேள்விக்கு 31ஆண்டு சிறைவாசம் அனுபவித்து பாதிக்கப்பட்டுள்ளதாவும் அப்பாவி என்று நீதிமன்றமே கூறி விடுவித்துள்ளதாக தெரிவித்தார்.

எந்த நீதிமன்ற தீர்ப்பை வைத்து கொண்டு கொலையாளி என கூறி வந்தனரோ அதே நீதிமன்றம் தற்போது விடுதலை செய்து விட்டதாகவும், அவர்கள் நீதிமன்றத்தை அணுகி கேட்டுக்கொள்ளட்டும் எனவும் அற்புதம்மாள் ஆவேசம் பொங்க குறிப்பிட்டார்.


Updated On: 28 Jun 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!