/* */

சென்னை மாநகராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் உதவி

சென்னை மாநகராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவியை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் உதவி
X

அமைச்சர் சேகர் பாபு

சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவியை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர் பாபு இணைந்து வழங்கினர்.

இந்நிகழ்வில் சென்னையில் உள்ள 719 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 10785 பேருக்கு 28.85 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

மேலும் PM ஸ்வா நிதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தொழில் புரிய ஏதுவாக 50 நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு: .

மகளிர் சுய உதவி குழுக்கள் முன்னேற்றம் மற்றும் மறுமலர்ச்சி என்பது கலைஞரின் ஆட்சிக்காலம் என்பது என்றால் மிகையாகாது

கடந்த 10 ஆண்டு காலமாக சோர்ந்து கிடந்த இந்த மகளிர் குழுக்கள் தற்பொழுது முதலமைச்சரால் புத்துயிர் பெற்றதுள்ளது என்றார்.

கடந்த 13ஆம் தேதி கூட முதலமைச்சர் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்களுக்கு 2750 கோடிக்கு தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி தந்த பெருமை முதலமைச்சரை சாரும்

திமுக ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகியுள்ளன அதிலும் ஐந்து மாதங்கள் கொரோனாவிற்காக செலவழிக்கும் பட்டதாகவும் பெருமழை வெள்ளத்தால் தொடர்ந்து 35 நாட்கள் மக்களை முதல்வர் சந்தித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தின் சீர்கேட்டால் பொருளாதார பாதிப்பால் சென்னை மாநகராட்சியும் கடன் சுமையால் ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத சூழல் நிலவியது. இவைகள் அனைத்தையும் சமாளித்து கஜானா காலி. களஞ்சியம் காலி என்றாலும் தன்னுடைய நிர்வாகத்திறமை என்றும் காலியாக இருக்காது என்று முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார் என புகழாரம் சூட்டினார்.

ஆட்சிக்கு வந்த ஏழு மாதத்திலேயே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2750 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்பது இந்தியாவிலேயே தமிழக முதலமைச்சர் போல வேறு யாரையும் பார்க்க முடியாது என்றார்.

Updated On: 16 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு