Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
இ மெயில் மூலம் கொரோனா மையம் தொடங்கலாம் - ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சிக்கு இ&மெயில் அனுப்பிவிட்டு கொரோனா சிகிச்சை மையம் துவங்கலம் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகரில் நேற்று மட்டும் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும் என அவசியம் இல்லை. விண்ணப்பம் தேவையில்லை. மாநகராட்சி அலுவலக அதிகாரிக்கு இ மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு சிகிச்சை மையம் தொடங்கலாம் என தெரிவித்தார்.