/* */

இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்

செங்கல்பட்டு அருகே இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழினை வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் வழங்கினார்.

HIGHLIGHTS

இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்
X

செங்கல்பட்டு அருகே இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழினை வழங்கிய வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நடுவக்கரை ஊராட்சி இந்திரா நகர் இருளர் பகுதியை சேர்ந்த 48 நபர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பாளராக மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் கலந்துகொண்டு ஜாதி சான்றிதழினை வழங்கினார்.

மேலும் அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா, விடுபட்ட நபர்களுக்கு ஜாதி சான்றிதழ், மின் இணைப்பு மற்றும் விதவை, முதியோர் உதவி தொகை வழங்க கோரி மனுக்களை அளித்தனர்,

நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக்ரகுநாத், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நிர்மலா, கிராம நிர்வாக அலுவலர் அமித் பாஷா, கிராம செயலாளர் ஜோதிபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்