/* */

கோரிக்கை நிறைவேற்றாவிடில் நாடு தழுவிய போராட்டம்: மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம்

15 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம். மணல் லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் ராஜாமணி பேட்டி

HIGHLIGHTS

கோரிக்கை நிறைவேற்றாவிடில் நாடு தழுவிய போராட்டம்: மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம்
X

குரோம்பேட்டையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆலோசனை கூட்டம் அதன் மாநில தலைவர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் ராஜாமணி அரசு ஆண்டுக்கு ரூ.250கோடி வருவாய் கிடைத்திடவும், மனல்லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், லட்சக்கணக்கான கட்டுமான கட்டிட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை இயக்க நடவடிக்ககை வேண்டுகிறோம்.

லாரிகளில் லோடு ஏற்றும்போது கண்டிப்பாக தரச்சான்றிதழ் நகல் வழங்கப்பட வேண்டும். லாரிகளுக்கு லோடு ஏற்றும்போது பகுப்பாய்வு அறிக்கை நகல் வழங்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறையிடம் அனுமதி பொறாமல் தரமற்ற செயற்கை மணல் உற்பத்தி செய்யும் கிரசர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இயக்கும் அனைத்து செயற்கை மணல் நிறுவனங்களிலும் ஓரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தற்சமயம் அனைத்து செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்களும் திடீரென ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.300 வரை விலையேற்றம் செய்ததை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டு மொத்த லாரி உரிமையாளர்களை திரட்டி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Updated On: 26 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!