/* */

சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர் உத்தரவு

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் - செங்கல்பட்டு ஆட்சியர்.

HIGHLIGHTS

சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர் உத்தரவு
X

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். 

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளினால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனையடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000/- அபராதம் விதிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி வாரியாக கால்நடை பட்டிகளை நிறுவி கால்நடைகளை அதில் அடைத்து அபராதம் பெற்றபின் உரிமையாளரிடம் ஒப்படைக்க இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு மேல் ஆகியும் உரிமையாளர் எவரும் வரவில்லை எனில் காட்டாங்கொளத்தூர் அருகேயுள்ள கொண்டமங்கலம் பகுதியில் உள்ள மாவட்ட அளவிலான பட்டிக்கு மாடுகள் மாற்றம் செய்யப்படும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்