/* */

சென்னையில் அமைச்சர் ஆய்வு செய்து அனுப்பிய பேருந்து நடுவழியில் நின்றது

சென்னையில் அமைச்சர் ஆய்வு செய்து அனுப்பிய பேருந்து செங்கல்பட்டு அருகே புகை வந்து நடுரோட்டில் நின்றது.

HIGHLIGHTS

சென்னையில் அமைச்சர் ஆய்வு செய்து அனுப்பிய பேருந்து நடுவழியில் நின்றது
X

செங்கல்பட்டு அருகே நடுவழியில் நின்ற அரசு பஸ்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கோயம்பேட்டில் இருந்து அதிகளவு பேருந்துகள் தென்மாவட்ட மக்களுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் பேருந்துகள் தரமாக இருக்கிறதா முறையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை செல்லும் சிறப்பு சொகுசு பேருந்து கோயம்பேட்டில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து வந்து கொண்டிருந்தது அப்போது செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே வருகை தந்தபோது, திடீரென அந்த பேருந்தில் இருந்து மளமளவென புகை வந்தது. இந்த புகை வேகமாக பரவியதால் , பேருந்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பயணிகள் அந்த பேருந்தில் இருந்து வெளியேறி வேறு பேருந்துக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாக அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிவதால் வேறு பேருந்தில் ஏற முடியாமல் பயணிகள் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்து வந்தனர். கோயம்பேட்டில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அனுப்பிய பேருந்து செங்கல்பட்டு டோல்கேட் வருவதற்குள்ளாகவே புகை வந்து நின்று போனது பயணிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Updated On: 14 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...