/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மனிதநேய மக்கள் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு (தெற்கு) மாவட்டம் சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பு குழுத்தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பு துணைச்செயலாளர் லால்பாஷா வரவேற்றார்.. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின்மாநில அமைப்பு செயலாளர் எஸ்.எம். ஷாஜகான், மாநில வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் சலீம்பாஷா, ஜமாஅத்துல், உலமா சபை மாவட்ட செயலாளர் முஹம்மத்அசாருதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

கொரோனா தொற்றால் வேலை இழந்து அவதிப்படும் மக்களின் நிலையை உணராமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்,

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்திட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Updated On: 6 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்