/* */

அரியலூர் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் தயார் செய்யும் பணி மும்முரம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தா.பழூர் ஒன்றியத்தில் மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஆகிய ஊராட்சிகளுக்கு தலைவர் பதவிக்கும், அம்பாப்பூர் ஊராட்சிக்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்புவதற்கு தேவையான உபகரணங்கள் தயார் செய்து வருகின்றனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருமான ஜெயராஜ் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் தயார் செய்யப்பட்டது.

இதில் வாக்குப் பெட்டி, வாக்காளர் பட்டியல், வாக்குச்சீட்டு, வாக்களிப்பு மறைவு அட்டைகள், தாள் முத்திரை,மை, முத்திரை அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, உள்ளிடட் 42 வாக்குச்சாவடி பொருட்கள் உள்ளிட்டவைகளை தயார் செய்து வைத்துள்ளனர்.

அந்தந்த வாக்கு மையத்திற்கு அனுப்புவதற்கு மூட்டையாக கட்டி பூத் எண் வாரியாக அடையாள அட்டைகள் ஒட்டி தயார் நிலையில் வைத்துள்ளனர்.

தேர்தல் உதவியாளர் அபிமன்யு மற்றும் அலுவலக உதவியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 8 Oct 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  4. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  5. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  7. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  8. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  9. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  10. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை