Begin typing your search above and press return to search.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை பொதுக்கூட்டம்
அரியலூரில் மக்கள் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டம் மற்றும் நிதியளிப்பு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எம்.சின்னத்துரை பங்கேற்று உரையாற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், துரை.அருணன், பி.பரமசிவம், அம்பிகா, கந்தசாமி, எம்.வெங்கடாசலம், கே.மகாராஜன், ஒன்றிய செயலாளர்கள் திருமானூர் ஆர்.புனிதன், தா.பழர் ஜே.ராதாகிருஷ்ணன், செந்துறை கு.அர்ச்சுனன், மற்றும் திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினா துரைசாமி நன்றிகூறினார்.