/* */

இந்திய அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார் அரியலூர் வீரர் கார்த்திக்

தமிழக வீரர் அரியலூர் கார்த்திக் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் கோலை பதிவு செய்துள்ளார்.

HIGHLIGHTS

இந்திய அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார் அரியலூர் வீரர் கார்த்திக்
X

மகன் கோல் அடித்ததை பக்கத்து வீட்டு டிவியில் பார்த்தனர் அரியலூர் கார்த்திக்கின் பெற்றோர்.

அரியலூர் - ஆசிய கோப்பைக்கான இந்தியா - பாகிஸ்தான் முதல் போட்டியில் முதல் கோலை பதிவு செய்த தமிழக வீரர் அரியலூர் கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இன்று இந்தோனேஷியாவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கான ஹாக்கி போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆட்டம் ஆரம்பித்ததும் இந்திய அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்‌ தமிழகத்தை சேர்ந்த அரியலூர் வீரர் கார்த்திக்.

தங்கள் இல்லத்தில் உள்ள டிவியில் அந்த ஒளிபரப்பு இல்லாத காரணத்தினால் பக்கத்து வீட்டில் டி.வி.யை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர் கார்த்திக்கின் பெற்றோர்கள்.

அரியலூர் நகரை சேர்ந்த கார்த்திக் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருடைய தந்தை செல்வம் வங்கியில் இரவு நேர காவலராக பணியாற்றி தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலராக பணியாற்றி வருகின்றார். தாய் வளர்மதி வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்து கார்திக்கை படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் 7 ஆம் வகுப்பு வரை அரியலூரில் உள்ள தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். பின்னர் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ யில் 7 முதல் 10 வரை படித்துள்ளார்.

பின்னர் கார்த்திக்கின் விளையாட்டு திறனை பார்த்த திருச்சி தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கார்த்திக்கை அழைத்து விளையாட்டு திறனை மேம்படுத்தியுள்ளார். பின்னர் விளையாட்டு திறனை பார்த்த கோவில்பட்டி எஸ்.எஸ் துரை சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து வருகின்றார்.

அவரது விளையாட்டு திறனை பார்த்த பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு எக்லான்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

தற்போது இந்தோனேஷியால் நடைபெறயிருக்கும் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் முன்கள ஆட்டக்காரராக விளையாட‌ தேர்வு செய்யப்பட்டு முதல் கோலை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் விளையாட்டுக்காக தன்னுடைய விடா முயற்சியில் மற்றும் தன்னுடைய ஆட்ட திறனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளது அரியலூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இன்று சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் கோலை பதிவு செய்துள்ளார்.

Updated On: 24 May 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை