/* */

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?

இந்த பெயர்ச்சியில் குரு பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

HIGHLIGHTS

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
X

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

பொது பலன்கள்

குருபகவான், கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ரிஷபம் குருவின் பகைவீடு. அதேபோல குருவின் விசேஷப் பார்வைகளான 5, 7,9-ம் பார்வைகள் முறையே கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளில் பதிகின்றன. அதோடு கோசார ரீதியாக மீனத்தில் ராகு, கன்னியில் கேது என்ற அமைப்பும், கும்பத்தில் சனி இருக்கும் அமைப்பும் காணப்படுகிறது.

இத்தகைய அமைப்பின் காரணமாக இந்த குரு பெயர்ச்சியினால் உலக அளவில் ஒருவித பரபரப்பான சூழல் காணப்படும். பகை நாடுகளின் அச்சுறுத்தல், பிரபலங்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் இவை தோன்றினாலும் சரியான நடவடிக்கைகளால் அனைத்தும் சீராகும். உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயரும்.

புதிய கண்டுபிடிப்புகளால் வான் வெளியில் பல அதிசயங்கள் நிகழ்த்தப்படும். கொடுமையான நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களின் ஆரோக்யம் பாதுகாக்கப்படும். மக்களிடையே சகோதர மனப்பான்மை, தெய்வீக நாட்டம், வலைதளங்களில் பகிரப்படும் விஷயங்களின் உண்மையை அறிதல் போன்றவற்றால் அமைதி நிலவும். மகான்கள் வழிபாடு, முதியோரை மதித்தல் போன்ற செயல்களால் இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நன்மை தருவதாக அமையும்.

வசீகரமாக பேசுவதில் வல்லவர். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

பொது பலன்கள்

தற்போதைய பெயர்ச்சியில் குருவானவர், உங்கள் ராசிக்கு அதாவது ஜன்ம ராசியான ரிஷபத்திற்கு வருகிறார். இது ஜன்ம குரு காலம் என்று யாராவது அச்சுறுத்தினால் பயப்பட வேண்டாம். அவரது விசேஷ பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 5,7,9-ம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பினால், பூர்வ புண்ணிய பலம் அதிகரிக்கும். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் சேரும். அதேசமயம் விட்டுக் கொடுத்தலும், வீண் ரோஷம் தவிர்ப்பதும் முக்கியமாகும். அலுவலகத்தில் நீங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட தன்னடக்கமே நல்லது. பிறர் குறையை பெரிதுபடுத்துவதைத் தவிருங்கள். எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சுமுகமான போக்கு நிலவும். இந்த சமயத்தில் வேண்டாத ரோஷம் பெரும் சங்கடத்தை உருவாக்கிவிடலாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.

சுபகாரியங்களில் பெற்றோர், பெரியோர் ஆலோசனைகலைக் கேளுங்கள். பிறமொழி நபர்களிடம் கவனமா பழகுங்கள். தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு ஒப்பந்தத்தில் அவசரம் வேண்டாம். நடைமுறை சட்டங்களில் கவனமாக இருங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள். அரசியலில் இருப்போர் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. அரசாங்க ஊழியர்கள் வளர்ச்சி அதிகரிக்கும். கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள்.படிப்பில் கவனச் சிதறலைத் தவிருங்கள். சினிமா, கலைத்துறையினர் ரகசியங்களைப் பொது இடத்தில் பகிர வேண்டாம்.கழுத்து,மூட்டு, ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி உபாதைகள் வரலாம். வாகனப்பழுதை உடன் சீர் செய்யுங்கள். துர்க்கை, தட்சிணாமூர்த்தி வழிபாடு வாழ்வை செழிக்க வைக்கும்.

நட்சத்திர பலன்கள்

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.

ரோகினி:

இந்த பெயர்ச்சியின் மூலம் வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதுக்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.

Updated On: 25 April 2024 3:53 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு