/* */

பனகல் அரசர் பிறந்த நாளின்று

The Raja Saheb of Panagal-பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார்.

HIGHLIGHTS

பனகல் அரசர் பிறந்த நாளின்று
X

பனகல் அரசர்

The Raja Saheb of Panagal-பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார்.

ராமராயநிங்கார் வேளமார் சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். 1899 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.

மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியா முழுமையும் சமஸ்கிருதத்தைத் திணிக்க அதிதீவிரமாய் முயன்றுகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் (சென்னை மாகாணம்) முதல்வராக இருந்த ஒருவர் கட்டாய சமஸ்கிருதத்துக்குத் தடைவிதித்திருக்கிறார்! அவர் – இராமராய நிங்கர். "பனகல் அரசர்' என்றால் பட்டென்று புரியும்

ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகில் உள்ள பனகல் எனும் ஊரின் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர், பனகல் அரசர்.ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி நடைபெற்ற்றுக்கொண்டிருந்த சமயத்தில்,அப்போதைய முதலமைச்சர் சுப்பராயலு உடல்நிலை காரணமாக பதவி விலகினார். இதையடுத்து ஏப்ரல் 11, 1921 அன்று முதல்வராக பதவியேற்றார் பனகல் அரசர்.

அப்போது மருத்துவப் படிப்பு படிக்கவேண்டுமானால் சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. "மருத்துவத்துக்கும் சமஸ்கிருத மொழிக்கும் என்ன தொடர்பு? ஆங்கில வழியில் கற்றுத்தரப்படும் மருத்துவப்படிப்புக்கு எதற்காக சமஸ்கிருத பாடம்?" என்று பலரும் ஆதங்கப்பட்டனர் என்றாலும், இந்த விதி அமலில் இருந்தது.

இந்த நிலையில்தான், "மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை' என்று உத்தரவிட்டார் முதல்வராக இருந்த பனகல் அரசர். இதற்கு செல்வாக்கு மிகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரிமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து சாதித்தார் பனகல் அரசர்.


இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரே மருத்துத்துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த நிலை மாறி, அனைத்து சமூகத்தவரும் மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டது.

இது மட்டுமல்ல… கோயில் சொத்துக்களை ஒருசிலரே அனுபவித்து வருவதைத் தடுக்கும் வகையில் கோயில்களுக்கென தனி துறையை உருவாக்கியதும் இவரே. இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார்.

அப்போது இதற்கு பல தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்து அந்த சட்டத்தை நிறை வேற்றினார். இந்து அறநிலையத்துறை உருவாகியதன் தொடக்கம் இதுதான். கோயில் என்பது அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது.

தொழில்துறையை ஊக்குவிக்கவும் சட்டத்தைக் கொண்டுவந்தார். வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.தலைநகரமான சென்னையை விரிவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, சைதாப் பேட்டைக்கும் சேத்துப்பட்டுக்கும் இடையில் இருந்த பெரிய ஏரியை வற்றச்செய்து, அங்கு பெரிய குடியிருப்புத் திட்டத்தை உருவாக்கியவர் இவரே. அந்த பகுதிதான் இன்றைய தியாகராயர் நகர். புதுடில்லி போல இப்பகுதி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.அவரது நினைவாக உருவாக்கப்பட்டதுதான் தி.நகரில் உள்ள பனகல் பூங்கா.

அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கீழ் இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. மாகாண முதல்வர்களுக்கு குறைந்த அதிகாரம்தான் அளிக்கப்பட்டிருந்தது. அந்த 5நிலையிலும் பல பல சாதனைகளைப் புரிந்தார் பனகல் அரசர். அவருக்கு இன்று (ஜூலை 9-ம் தேதி) 155-வது பிறந்த தினம்.


பனகல் அரசர், டிசம்பர் 16, 1928 இல் இறந்தார். அவரது நினைவாக தி. நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா "பனகல் பூங்கா" என்றும் சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம் "பனகல் மாளிகை" என்றும் அழைக்கப்படுகின்றன.

நன்றியுடன் நினைவு கூர்வோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 9:28 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...