/* */

புவனேஷ்வரில் 100% மக்களுக்கு தடுப்பூசி- சாதனை நிகழ்த்திய முதல் இந்திய நகரம்

அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி போட்டு சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் நகரமாக ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வர் மாறியுள்ளது

HIGHLIGHTS

புவனேஷ்வரில் 100% மக்களுக்கு தடுப்பூசி- சாதனை நிகழ்த்திய முதல் இந்திய நகரம்
X

அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி செலுத்தி கோவிட் -19-க்கு எதிராக 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டு சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் நகரமாக ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வர் மாறியுள்ளது.மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு புவனேஷ்வர் மாநகராட்சி உதவி கமிஷனர் அன்ஷுமன் ராத் கூறும்போது, "கோவிட்-19க்கு எதிராக 100% மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதோடு புவனேஷ்வரில் உள்ள சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறிய போது, "ஜூலை 31 ம் தேதிக்குள் புவனேஷ்வரில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயித்தோம், அதன் படி 18 வயதுக்கு மேற்பட்டோர் 9 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு 2வது தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தி விட்டோம். இதில் 31,000 சுகாதார ஊழியர்கள், 33,000 முன் களப்பணியாளர்கள், 18-45 வயதுடையோர் பிரிவினர் 5 லட்சத்தி 17,000 பேர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 3,20,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூலை 30ம் தேதி வரை 18 லட்சத்து 35,000 வாக்சின்கள் செலுத்தப்பட்டுள்ளன" என்றார்.

இந்த இலக்கை எட்ட நகரம் முழுதும் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 30 தடுப்பூசி மையங்கள் இயக்கப்பட்டன.அதே போல் மொபைல் தடுப்பூசி மையங்களும் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர பள்ளிகளில் நோய் தடுப்பாற்றல் மையங்கள் 15 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. இது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்தச் சாதனையை நிகழ்த்திய அனைத்து பணியாளர்களுக்கும் ஒத்துழைத்த மக்களுக்கும் கமிஷனர் தன் நன்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

Updated On: 2 Aug 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...