/* */

அரசு சலுகைகளை பெற இனி ஆதார் கட்டாயம்: ஆதார் ஆணையம்

மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளை பெற இனி ஆதார் எண் கட்டாயம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அரசு சலுகைகளை பெற இனி ஆதார் கட்டாயம்: ஆதார் ஆணையம்
X

அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி இந்திய ஆதார் ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது.

அந்த சுற்றறிக்கையில், மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களின் கீழ் மானியங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம். ஆதார் வழங்கப்படாத சூழலில் நிரந்தர ஆதார் அட்டை பெறும்வரை, ஆதார் பதிவு செய்த எண்ணெய் பயன்படுத்தி சேவைகளை பெறலாம்.

ஆதார் எண் அல்லது அது பதிவு சீட்டு இல்லை என்றால் அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தற்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் UIDAI தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆதார் இல்லாத நபர்கள் அரசின் மற்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க ஆதார் சட்டத்தின் 7வது பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு இனி அரசின் அனைத்து விதமான சலுகைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

Updated On: 17 Aug 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...