/* */

அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்

சமீபத்தில் போப் பிரான்சிஸ் 3 நாள் பயணமாக தெற்கு சூடான் நாட்டுக்கு சென்றிந்தார்.

HIGHLIGHTS

அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
X

பைல் படம்.

தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் போப் பிரான்சிஸ் தனது அடுத்த பயண திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது வரும் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்கு செல்லவிருப்பதாக கூறினார். அதற்கு பின்பு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறினார். பின்பு முதன்முறையாக மங்கோலியா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறிய போப் பிரான்சிஸ் 2024-ம் ஆண்டு இந்தியா வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஐரோப்பாவில் சிறிய நாடுகளாக தேர்ந்தெடுத்து சென்று வருவதாகவும் அதன் மூலம் அறியப்படாத ஐரோப்பாவை அறிந்து கொண்டு வருவதாகவும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் இந்தியாவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை தொடர்ந்து போப் பிரான்சிஸ் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக இந்திய பிரதமர்களில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமே அப்போதைய போப்-களை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Feb 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...