அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்

சமீபத்தில் போப் பிரான்சிஸ் 3 நாள் பயணமாக தெற்கு சூடான் நாட்டுக்கு சென்றிந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
X

பைல் படம்.

தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் போப் பிரான்சிஸ் தனது அடுத்த பயண திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது வரும் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்கு செல்லவிருப்பதாக கூறினார். அதற்கு பின்பு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறினார். பின்பு முதன்முறையாக மங்கோலியா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறிய போப் பிரான்சிஸ் 2024-ம் ஆண்டு இந்தியா வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஐரோப்பாவில் சிறிய நாடுகளாக தேர்ந்தெடுத்து சென்று வருவதாகவும் அதன் மூலம் அறியப்படாத ஐரோப்பாவை அறிந்து கொண்டு வருவதாகவும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் இந்தியாவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை தொடர்ந்து போப் பிரான்சிஸ் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக இந்திய பிரதமர்களில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமே அப்போதைய போப்-களை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Feb 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஓட்டுநர் உரிமம் தொலைந்தாலும் மீண்டும் எளிதாக பெற வாய்ப்பு
  2. தமிழ்நாடு
    பாகுபலியானார் எடப்பாடி பழனிசாமி: கோவை அ.தி.மு.க.வினர் வைத்த கட்அவுட்
  3. சினிமா
    எம்.ஜி.ஆரும் தென்னிந்திய நடிகர் சங்கமும்
  4. தமிழ்நாடு
    சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ்: சினேகாவை பாராட்டிய நடிகை குஷ்பு
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இருந்து பங்குனி உத்திர பூஜைக்கு 1000 காவடிகள்...
  6. கரூர்
    கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
  7. கல்வி
    employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
  8. கரூர்
    பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
  9. தூத்துக்குடி
    அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
  10. கரூர்
    கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்