Begin typing your search above and press return to search.
ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா
முருக்கன்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் முருக்கன்குளம் ஊராட்சி மன்றம் சார்பாக, மகளிர் தின விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமை வகித்தார்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த முடுக்கன்குளம் ஊராட்சியின் பணித்தள பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்ட இளமதிக்கு, ஊராட்சி சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கிராம பிரமுகர்கள் வாலை முத்துச்சாமி, சிவ ஆனந்த அருள் மொழிவர்மன், மண்டல அலுவலா் கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.