Begin typing your search above and press return to search.
விருதுநகர்: வாகன சோதனையில் ஒரு 1லட்சத்து 30 ஆயிரத்தி 910 தொகை பறிமுதல் செய்தனர்
பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்
HIGHLIGHTS
விருதுநகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை 910 ரூபாயை பறிமுதல் செய்தனர்
விருதுநகர் செந்தில்விநாயகபுரம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் இவர் புதிய பேருந்து நிலையம் அருகில் மரக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள மரக்கடைக்கு சென்று முன்தொகை கொடுத்துவிட்டு திரும்பி வரும்பொழுது, விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோடு பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது கணேசன் என்பவரிடம் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ஒரு லட்சத்தி 30 ஆயிரத்து 910 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் .பின்பு நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் அவர்களிடம் ஒப்படைத்தனர்