Begin typing your search above and press return to search.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு நிதியுதவி
சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.
HIGHLIGHTS
சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள களத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சமும், காயமடைந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவிகளை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.