/* */

காரியாபட்டி அருகே மணல் அள்ளிய 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

காரியாபட்டியில் மணல் அள்ளிய 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே மணல் அள்ளிய 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
X

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புல்லூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆவியூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆவியூர் போலீஸ் சப்-இன்ஸ்–பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புல்லூர் கண்மாய் பகுதியில் 2 டிராக்டர்களில் பொக்லைன் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். மணல் அள்ளி கொண்டிருந்ததை கண்ட போலீசார் அங்கு சென்றபோது, ஒரு சிலர் தப்பி ஓடி விட்டனர்.

இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வெள்ளாங்குளத்தை சேர்ந்த மாரிச்சாமி (வயது 24), தொடுவம்படி கிராமத்தை சேர்ந்த அய்யனார் (35) என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், மாரிச்சாமி, அய்யனார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!