Begin typing your search above and press return to search.
விதிமுறைகளை மீறிய 46 வாகனங்களுக்கு அபராதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் மம்சாபுரம், மல்லி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆகிய பகுதிகளில் 20 குழுக்கள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஆட்களை ஏற்றி வந்த 46 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப் பட்டது.