/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி (தீ மிதி)திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வழக்கமாக பங்குனி அமாவாசை தினத்தன்று அதாவது 12 ஆம் திருநாள் நடைபெறும் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று அதிகாலை தொடங்கியது. முன்னதாக நேற்று இரவே கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டு அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் 4 ரத வீதிகள் வழியாக சென்று வந்து கோவிலின் அருகே பூக்குழி இறங்கி வருகின்றனர்.

முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஏடிஎஸ்பி மாரிராஜ் முதலில் பூக்குழி இறங்கி துவக்கி வைத்தார், தொடர்ந்து 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 400க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை கொரோனோ பாதிப்பு காரணமாக இந்த கோவில் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...