/* */

ராஜபாளையத்தில் இளம் பெண் காணவில்லை: தந்தை புகார்

தாத்தா வீட்டில் சில நாட்கள் இருந்த தனலட்சுமி திடீரென்று அங்கிருந்து காணாமல் போனதாக அவரது தந்தை புகார் அளித்தார்

HIGHLIGHTS

ராஜபாளையத்தில்  இளம் பெண் காணவில்லை: தந்தை புகார்
X

பைல் படம்

ராஜபாளையத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த மகளை காணவில்லை என தந்தை புகார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (46). இவரது மகள் தனலட்சுமி (19). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்த சண்முகநாதன், மகள் தனலட்சுமியின் பாதுகாப்பு கருதி ராஜபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

தாத்தா வீட்டில் சில நாட்கள் இருந்த தனலட்சுமி திடீரென்று அங்கிருந்து காணாமல் போனார். மகள் காணாமல் போன தகவலறிந்த சண்முகநாதன், அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். சண்முகநாதன் புகாரில், தனது மகளை கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 28 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்