/* */

காரியாபட்டியில் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் துவங்கப்பட்டது

HIGHLIGHTS

காரியாபட்டியில்  ஒருங்கிணைந்த வேளாண்  திட்டம் தொடக்கம்
X

காரியாபட்டி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் தொடங்கப்பட்டது

காரியாபட்டி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் தொடங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் துவங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொளி மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில், முடுக்கங்குளம் ,ஊராட்சி கம்பிக்குடி, ஊராட்சி , ,கடமங்குளம் ஊராட்சிகளில் ,திட்டம் துவங்கப்பட்டது . காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம் ஊராட்சியில் , நடைபெற்ற துவக்க விழாவுக்கு, முடுக்கங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திமுத்துச்சாமி தலைமை வகித்தார் . பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.காரியாபட்டி கம்பிக்குடி ஊராட்சி, மந்திரி ஓடையில் ஊராட்சித்தலைவர் லட்சுமி பாலு தலைமையில் ,திட்ட துவக்கவிழா நடந்தது. வட்டாட்சியர் தனக்குமார் பயனாளிகளுக்கு, வேளாண் கருவிகள் வழங்கினார் .

உதவி இயக்குனர் தெய்வம், வேளாண்மை அலுவலர் மகாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரி சரஸ்வதி கிராமஉதவியாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடமங்குளம் ஊராட்சி புல்லூரில், நடைபெற்ற திட்ட துவக்கவிழா நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் திருவாசகம் தலைமை வகித்தார்.ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ,வட்டாட்சியர் தனக்குமார், திமுக ஒன்றியச்செயலாளர் கண்ணன் , துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஆத்மா திட்டத்தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Updated On: 24 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...