/* */

இராசபாளையம் அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்

இராசபாளையம் அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இராசபாளையம்  அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்
X

இராசபாளையம் அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை சார்பில், கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை , விருதுநகர் மாவட்ட இணை இயக்குனர் முருகவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இராஜபாளையம் அரசு மருத்துவமணை மருத்துவ அதிகாரி உமா ஜெயபாஸ்கர் மருத்துவர் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த பேரணி, ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்த அடைந்தது.

பேரணியில் ( நர்சிங் கல்லூரி ) செவிலியர் பயிற்சி மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்தானம் செய்வதின் பயன்களை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர் . பேரணி முடிவில், கண் தானம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On: 4 Sep 2022 5:04 AM GMT

Related News