Begin typing your search above and press return to search.
இராசபாளையம் அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்
இராசபாளையம் அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை சார்பில், கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை , விருதுநகர் மாவட்ட இணை இயக்குனர் முருகவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இராஜபாளையம் அரசு மருத்துவமணை மருத்துவ அதிகாரி உமா ஜெயபாஸ்கர் மருத்துவர் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த பேரணி, ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்த அடைந்தது.
பேரணியில் ( நர்சிங் கல்லூரி ) செவிலியர் பயிற்சி மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்தானம் செய்வதின் பயன்களை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர் . பேரணி முடிவில், கண் தானம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.