/* */

திருச்சுழியில் மழையில் நனைந்து சுமார் 50 ஆயிரம் நெல் மூடைகள் சேதம்

திருச்சுழியில் மழையில் நனைந்து சுமார் 50 ஆயிரம் நெல் மூடைகள் சேதமடைந்ததால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சுழியில் மழையில் நனைந்து சுமார் 50 ஆயிரம் நெல் மூடைகள் சேதம்
X

மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட முடுக்கன்குளம், நரிக்குடி, கட்டனூர், நாலூர், பட்டமங்களம் போன்ற 25-க்கும் மேற்பட்ட கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்த நெல் கொள்முதல் நிலையத்தை சுற்றியுள்ள 200 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குறித்த காலத்தில் வாணிப கழகத்திற்கு ஏற்றிச் செல்ல லாரிகள் வராததால் கடந்த ஒரு மாத காலமாக நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 50-ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வெகு நாட்களாகிய நிலையில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைத்தும், முறையான பாதுகாப்பின்றி எலிகள் மற்றும் கால்நடைகளால் நெல் மூட்டைகள் அனைத்தும் சேதமடைந்து நெல் மணிகள் சிதறி கிடக்கின்றன. இதனால் அரசுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக வீணாகிய இந்த நெல் மூட்டைகளை வாணிப கழகத்திற்கு ஏற்றிச் செல்ல மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 14 April 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்