/* */

வேலை இல்லா என்ஜினீயரிடம் இணையதளம் மூலம் பணம் மோசடி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆன்லைன் மூலம் என்ஜினீயரிடம் பணம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

வேலை இல்லா என்ஜினீயரிடம் இணையதளம் மூலம் பணம் மோசடி
X

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். (கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கயத்தூரை சேர்ந்தவர் ஜெய்தீப் (வயது 29). இவர் பி.இ. கணினி அறிவியல் படித்து முடித்துவிட்டு தற்போது வேலையின்றி வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 22-ந் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜெய்தீப்பின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பினார். அதில் தினமும் வேலை, ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை ஊதியம் என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து சில மணி நேரம் கழித்து டெலிகிராம் மூலம் ஜெய்தீப்பை தொடர்புகொண்ட நபர், சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பி வைத்தார். உடனே ஜெய்தீப், அந்த லிங்கிற்குள் சென்று தனது விவரங்களையும் மற்றும் தனக்கென யூசர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து அந்த நபர் கூறியபடி ரூ.2 ஆயிரத்தை முதலீடு செய்து ரூ.2,800-ஐ திரும்ப பெற்றார்.

அந்த ஆசையில் கடந்த 24, 25-ந் தேதிகளில் ஜெய்தீப், அந்த நபர் கூறிய வங்கிகளின் கணக்குகளுக்கு போன்பே, கூகுள்பே மூலம் 7 தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 560-ஐ அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், ஜெய்தீப்புக்கு சேர வேண்டிய தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயதீப் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பூங்கோதை, உதவி ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காவல்துறை ஆன்லைன் ஏமாற்று குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக படித்தவர்களே பணம் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையில் ஏமாந்து வருவது வாடிக்கையாகி வருகிறார்கள். எனவே தற்போது அதனை தடுக்கும் நடவடிக்கையை காவல்துறை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 31 March 2023 2:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!