/* */

டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
X

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யும் மது பாட்டில்களுக்கு, அதிக பணம் வசூல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, விழுப்புரம் -சென்னை சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், இன்று திடீர் ரெய்டு நடைபெற்றது.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை சேர்ந்த மெல்வின் ராஜாசிங் மற்றும் ஆய்வாளர் ஜேசுதாஸ், காவலர்கள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்ம ராவ், ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர், விழுப்புரம் டாஸ்மாக் அலுவலகத்தில், இந்த சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தில் கணக்கில் வராத, ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இதுகுறித்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்