/* */

மின்கழிவு பதிவு செய்தவர்கள் மட்டுமே செயலாக்க அனுமதி- கலெக்டர் தகவல்

Villupuram News -விழுப்புரம் மாவட்டத்தில், மின்கழிவுகளை பதிவு செய்தவர்கள் மட்டுமே செயலாக்க வேண்டும் என, கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மின்கழிவு பதிவு செய்தவர்கள் மட்டுமே செயலாக்க அனுமதி- கலெக்டர் தகவல்
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

Villupuram News -இதுகுறித்து, கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், இந்திய அரசின் மின்னனு கழிவு (மேலாண்ளமை) விதிகள் 2016 ஐ (23.3.2016) அன்று அறிவித்தது, இந்தவிதிகள் அக்டோபர் 1, 2016 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2016-ன் கீழ், பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்கள் மட்டுமே, மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.

மேலும் மத்திய மாசுக்கட்டுபாடு வாரியத்திடம் நீட்டிக்கபட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின்-கழிவுகளை சேகரித்து, அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.

மின்னனுகழிவு (மேலாண்மை) விதிகள் 2016, விதி 24-ன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்-கழிவுபொருட்களைச் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்.

முறைசாரா வர்த்தகம், அறிவியல் பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின்கழிவுகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்-கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதை கட்டாயம் தவிர்ப்பது முக்கியம்.

மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016,விதி 21-ன்படி இவ்விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்,1986-ன் கீழ் தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.

எனவே இவ்வகையான செயல்களில் ஈடுபடும் மின்கழிவு கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் பிரிவு 5-ன் படி அந்நிறுவனத்தை மூடிடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சட்டத்தின் பிரிவு 15-ன் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை, சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின் கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தைத் தவிர்க்குமாறும், மேலும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு, மின்-கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள் என அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Nov 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  2. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  3. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  5. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  6. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  7. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...